Flash Content

Read What You want

5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பம். புலத்தை நோக்கி நகர்கின்றது.
Saturday, 04 September 2010 05:14

தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.

 

 
இந்தியாவின் நெருங்கிய நண்பனாகிவிட்ட கே.பி - அனலை நிதிஸ் ச. குமாரன்
Saturday, 28 August 2010 09:30

இந்தியா எதைச்சொல்லவேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு.  இந்தியாவின் றோவின் கைப்பொம்மையாகிவிட்ட கே.பி பரபரப்பான தகவல்களை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளதானது அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகைசூட உதவுமுகமாகவே தான் இப்படியான தகவலை கே.பி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டின் அரசியல் விமசகர்கள் கூறுகின்றார்கள் 

 
 
இலட்சியத்தைக் கைவிட்டவர்கள் ‘விடுதலைப் புலிகள்’ என்ற நாமத்தை உச்சரிக்கத் தகுதியற்றவர்கள்!
Sunday, 22 August 2010 22:30

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்த காலம் முதல்;, தேசியத் தலைவர் அவர்கள் விடுதலைப் புலிப் போராளிகளிடமும் பொது மக்களிடமும் தனது இலட்சியத்தை வலியுறுத்தும்போது, ‘நான் தமிழீழ இலட்சியத்தை எந்தக் காலத்திலாவது, என்ன காரணத்திற்காகவாவது கைவிட்டுவிட்டதாக நீங்கள் கருதினால், என்னை சுட்டுக் கொல்லத் தயங்க வேண்டாம்’ என்ற கட்டளையையும் விடுத்திருந்தார். அவரது அந்த ஆணை அவருக்கானது மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்துடன் தமிழீழ விடுதலைப் போருக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

 
தமிழீழ அவலங்களைக் காசாக்கும்' கத்தோலிக்க மேலாடை அணிந்த சாத்தான் ஜெகத் கஸ்பர்
Friday, 03 September 2010 20:55

முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் ஒரு முறை தேற்கடிக்கப்பட்டார்கள். தங்கள் உயிரும் சதையும் வேறாகப் பிரிக்கப்படுவதையும், தங்கள் உடலுக்கான குருதியால் அந்த மண் நனைந்து காய்வதையும் அவர்கள் நேரடியாகத் தரிசித்தார்கள். மரணத்தின் கடசித் தருணத்தையும் தரிசித்து, அங்கிருந்து தப்பியவர்கள் சிங்கள வதை முகாம்களுக்குள்ள சிறை வைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டார்கள்.


 
அரசின் திறைசேரியை நிரப்பும் கே.பி: புதிய தகவல்
Thursday, 26 August 2010 09:05

குமரன் பத்மநாதன் நடாத்தும் இணையத்தளமான நெரெடோவில், காசுக் கொடுக்கல் வாங்கல் பற்றிய கணக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நிதியுதவிகள் எவ்வாறு கிடைக்கப்பெறுகின்றன என்பது குறித்தோ, அல்லது எவ்வளவு நிதி சேகரிக்கப்பட்டது என்பது குறித்தோ வெளியிடாமல், வெறுமனவே செலவீனங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.

 
மேற்குலகத்தின் அழுத்தங்களும் பேரினவாதிகளின் அவல நாடகமும் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்
Sunday, 22 August 2010 18:56

சிறீலங்கா அரசுக்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வார இறுதியுடன் நிறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணைங்க மறுத்துள்ள சிறீலங்கா அரசு, ஐரோப்பியத்தின் வரிச்சலுகை நிறுத்தப்பட்ட நாளில் சீனாவின் நிதி உதவியில் அமைக்கப்பட்டு வரும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நீர் நிரம்பும் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளது.

- தொடர்ச்சி...

 

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>